states

img

ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்!

ஆந்திர பிரதேசம், பல்நாடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 39 பயணிகள் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மினிவேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.அப்போது மினி வேன் தலைகீழாக  கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குர்ஜாலா போலீசார் சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த நபர்கள் 10 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.